குஜராத் முன்னாள் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி (87) காலமானார். இவர் ம.பி, கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம் செலுத்தினார் என்று ட்வீட் செய்துள்ளார். ஓம் பிரகாஷ் கோலியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.