ஹெச்டிஎஃப்சி வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது regalia கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அந்த கார்டு மூலமாக பெரும் சலுகைகளுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு தாரர்களுக்கு கிடைக்கும் இலவச பவுச்சர்களின் எண்ணிக்கையை திருத்துகிறது. இந்த புதிய விதியின்படி வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு இலவச வவுச்சர்கள் மட்டுமே வழங்கப்படும்.

இந்த விதிமுறையானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறையின் படி இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவழிக்க வேண்டும்.  அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை ,ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு காலாண்டிலும் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும், அப்பொழுதுதான் சலுகையை பெற முடியும்,