சென்னையில்  பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள் அரிய வகை பொருள்கள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது வழக்கம்.  சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவர்கள் சிக்குகிறார்கள். இந்நிலையில் அகர் மரக்கட்டைகளை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த பை மற்றும் சூட்கேஸ் போன்ற பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 20 கிலோ எடையுள்ள அகர் மரக்கட்டைகளும் 15 பாட்டில்களில் அத்தர் வாசனை திரவியங்களும் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததுடன் ரூ‌.40 லட்சம் மதிப்புள்ள அகல் மரக்கட்டைகள் மற்றும் வாசனை திரவியங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.