வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் ஆற்று மணலை ஆட்டோவில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று குடியாத்தம் போடிப்பேட்டையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோ ஒன்று கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோவை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியத்தில், இவர் சீவூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது. இவர் அடிக்கடி மணலை கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.