மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமில்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் சென்ற பாதையில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மாற்று பாதையில் கார் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகே இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணத்த கிரிஷ் கட்டிக் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ் கட்டிக் மற்றும் ராஜக் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.