தமிழகம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு, சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை விதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது . இந்த உயிரிழந்த கால்நடைகளை  உட்கொண்ட கழுகுகளும் பலியானது.

இந்நிலையில் அந்த மருந்துகளுக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.