ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்த நிலையில் அவரது பின்னால் வாகனங்கள் அணிவகுத்து வந்தது. அப்போது 54 வயதான சீலி சிங்கையா என்ற நபர் ஜகன்மோகன் ரெட்டியின் வாகனம் மோதி உயிரிழந்தார். அதாவது அவர் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மலர் தூவுவதற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த நிலையில் அவரது மீது ஜெகன்மோகன் ரெட்டியின் காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியது.

 

இதில் அந்த முதியவர்  உயிர் இழந்தார். சுமார் 30 முதல் 35 வாகனங்கள் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி காரில் இருந்து கையசைக்கும் நிலையில் அதே காரின் சக்கரத்தின் அடியில் அந்த முதியவர் சிக்கி உயிரிழந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது  ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.