திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியது.

இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ராஜ்குமார் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை அறிந்த 2-வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.