
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய காட்டு பாளையம் கிராமத்தில் ஷீலா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். ஷீலாவும் அதே கிராமத்தில் வசிக்கும் முகேஷ் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஷீலா தனது காதலரை திருமணம் செய்து தனியாக அதே ஊரில் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷீலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஷீலாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முகேஷ் கடந்த 4 மாதங்களாக சீலாவை சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சில தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.