ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தில் வசித்து வந்த செல்வம் – வனிதா தம்பதியினரின் மகள் பிரியங்கா (20). இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்த மணிகண்டன் என்பவரை பிரியங்கா காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த வருட டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் காளையர்கோவில் அடுத்த ஆவரங்குடி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரியங்கா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரியங்காவின் தாயார் வனிதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் தற்கொலை செய்து கொண்ட தன்னுடைய மகளை மணிகண்டன் மற்றும் அவரது தாயார் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில்  தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.