தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் காதல் திருமணம் திமுக – காங்., போல் இருக்கக் கூடாது. மோடி, பாஜக போல் இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்த அவர், நீலகிரி தொகுதியை தயார்படுத்தும் பொறுப்பு மட்டுமே எல்.முருகனுக்கு வழங்கப்பட்டது என்று விளக்கமளித்தார். இதன்மூலம் சட்டமன்றத்தை குறிவைத்து தான் அண்ணாமலை அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறார் என்பது தெளிவாகிறது.