
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகர பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடி ஷெரீப் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த காதல் ஜோடி, தங்கள் சுயசெயலை காட்டிக்கொண்டே பொதுவழியில் பயணித்தது. இளம்வயதின் ஆர்வத்தில், பைக் ஓட்டி செல்வதற்கும் முத்தம் கொடுப்பதற்கும் இடையே நிகழ்ந்த இந்தச் சம்பவம், சாலையில் பயணம் செய்த சிலரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, பலரும் இந்த நிகழ்வை விமர்சித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அடிப்படையில் அந்த ஜோடியை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.
నడి రోడ్డు మీద బైక్ పై అసభ్యంగా ప్రవర్తించిన ప్రేమ జంట
హైదరాబాద్ – నగర శివార్లలోని పహాడీ షరీఫ్ ప్రధాన రహదారిపై బైక్ మీద వెళ్తూ అసభ్యంగా ప్రవర్తించిన ప్రేమ జంట pic.twitter.com/VZ5bZ1nrju
— Telugu Scribe (@TeluguScribe) September 25, 2024
“>
மேலும் சாலையில் வாலிபர் பைக் ஓட்டிய நிலையில் முன்னாள் அமர்ந்து கொண்டிருந்த இளம் பெண் அந்த வாலிபருக்கு முத்தம் கொடுத்தபடியே சென்று கொண்டிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.