தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வஜேடு மண்டலத்தில் உள்ள கொங்கல்குட்டாவில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இன்று  காலை 3 பேர் விறகுக்காக வனப்பகுதிக்கு சென்றபோது, ​​அவர்களில் ஏசு என்பவர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.

அப்போது கண்ணி வெடி வெடித்து சிதறியுள்ளார். மேலும் அவருடன் சென்ற ரமேஷ் மற்றும் பக்கீர் ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் உயிரிழந்தவர் ஜகன்னாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.