மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேஸ்புக், twitter போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 50 பேர் பின் தொடரும் இந்த கட்சியின் twitter கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் twitter பக்கம் ஹேக் செய்யப்பட்டு யுஹா லேபெஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் கணக்கை மீட்க திரிணாமுல் காங்கிரஸ் twitter நிறுவனத்தை அணுகியுள்ளது. இதனையடுத்து ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ட்விட்டர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  கட்சியின் அதிகாரப்பூர்வத் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.