இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் கூறியுள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் கூறியதாவது, இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் நடத்திய ஆய்வில் ஒடிசாவின் தியோகார், கியோஞ்ஜஹார், மயூர்பஞ்ச் போன்ற மாவட்டங்களில் மூன்று தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கியோஞ்ஜஹார்  மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும் தியோகர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் தங்கம் புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் ஒடிசா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் 9 இடங்களில் கண்டறியப்பட்ட தங்க சுரங்கங்களினால் அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.