கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பெரிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி. ‘நாட்டில் வறுமையை ஒழிப்பதாக கூறிய காங்கிரஸ் கட்சியினர் அதில் தோல்வியடைந்துவிட்டனர். ஆனால், அவர்கள் மட்டும் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்’ என குற்றம் சாட்டியுள்ளார்.