பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர், மல்யுத்த வீராங்கனைகள் இன்று ஹரித்துவாரில் உள்ள கங்கையில், தங்கள் ஒலிம்பிக் மெடல்களை வீச முடிவு செய்தனர். இதற்காக, அங்கு வந்த அவர்கள், தாங்கள் கஷ்டப்பட்டு ஜெயித்த, மெடல்களை வீசப்போகிறோமே என்ற வேதனையில், மெடல்களை பார்த்தபடி கண்ணீர் வடித்தனர். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அவர்களை தேற்றினர்.