டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். அதோடு தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தன் அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம் கவுதம் வாசுதேவ் மேனன். இது 2 கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்பதால் இதை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன். கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோன்று நடிகர் விஜய்சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இரண்டு பேரும் நடித்த எந்த படமும் அண்மையில் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தற்போது கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.