டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

இந்நிலையில்  தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் இன்று மூட பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி இயங்கினால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.