
பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான திலகபாமாவை நீக்குவதாக அறிவித்தார்.
அதிலிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். மேலும் கட்சியின் தலைவராகிய தனக்கு தான் முழு அதிகாரமும் உள்ளது என் அன்புமணி கூறினார்.
தற்பொழுது தைலபுரத்தில் இருந்து இரண்டாவது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். மறுபுறம் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
2-ஆம் நாள் ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, பொறுப்புகள் கொடுப்பது நீக்குவது எல்லாம் செல்லாது. நான் இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடத்தில் என்னோட லெட்டர் வந்துடும். குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான். கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு. தலைவர் தான் கையெழுத்து போடணும். அவர்தான் எல்லாமே நியமனம் பண்ணனும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.