2022 – 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமானது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கிட உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில் நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம். அதற்கு பதிலாக முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகுப்புகளை நடத்தி விட்டு அதன் பின்பு பாடங்களை நடத்த வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

வகுப்புகள் கால தாமதமாக தொடங்கப்பட்ட காரணத்தினால் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாடத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்கும் விதமாக சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகள் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வருகிற மே ஒன்றாம் தேதிக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்கத்தின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.