கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்தபோது “முதல்வர் யார் என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி அளித்துள்ளார்.