கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய ராகவேந்திரா, தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவரது மனைவியும், நடிகையுமான ஸ்பந்தனாவுக்கு (41) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்பந்தனாவின் உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது