தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்துள்ளதாக கூறிய அமைச்சர், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.