தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கன மழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1913 என்ற கட்டணமில்லா எண்ணெய் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.