தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில்  மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  அதேபோல விழுப்புரத்தில் மழை நீடிக்கும் பட்சத்தில்  விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.