சாதாரணமாக பணிக்கு போகும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அதுபோன்று ஷாப்பிங் மற்றும் வெளியில் போகும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவே இப்பதிவை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த புதுமையான முயற்சியை மிகவும் பாராட்டி உள்ளார். டென்மார்க்கில் இருக்கும் ஒரு கபே கணவர் பராமரிப்பு மையத்தை தொடங்கி உள்ளது. உங்களது கணவரை தங்களிடம் விட்டு விட்டு போங்க எனும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம் என்பதை மஹிகிந்திரா குழுமத்தின் தலைவர் கூறி இருக்கிறார்.