
புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென அந்த தம்பதியின் அருகே நெருங்கி கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்தனர்.
அவர்கள் இழுத்த வேகத்தில் வேகமாக சென்று பைக் கீழே கவிழ்ந்தது. இதில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கர்ப்பிணி பெண் என்பதால் தற்போது மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
#Puducherry is no safe 😔
Hope and pray that they are fine.Year 2024… City with CCTV camera, yet these miscreants are doing their regulars so casually.
Strict and strong action is required 🙏 pic.twitter.com/6BFZxVnUCa
— in Puducherry (@inPuducherry) November 29, 2024