
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(47). இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இந்த தம்பதியினருக்கு தனுஷ்(13), கோபிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், காந்தியின் சகோதரரான சேட்டுவின் மனைவி புஷ்பராணிக்கும்(48) குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 1/2 வயதுடைய கோபிகாவை புஷ்பராணி கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புஷ்பராணியை கைது செய்தனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி புஷ்பராணிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.