இந்திய தண்டனைச் சட்டம் 498 A பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தும்குருவை சேர்ந்த கந்தராஜூ என்னும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை துன்புறுத்துவதாக இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில்  மாற்றுத்திறனாளி கந்தராஜூ குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்  இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கணவர் கந்தராஜூ மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.