60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம் தோறும் 10000 ரூபாய் இந்த திட்டத்தில் பெற முடியும். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.