திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் கட்சியை சேர்ந்த ஜோதி முத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஜோதிமுத்தை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது.