கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேணா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 15 நிபதனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து ஏற்கனவே மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக தரப்பில் ஜெயக்குமாரும் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். ரூ.81கோடியில் 134 உயரத்திற்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.