கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி கைதான இவரின் ஜாமின் மனுவை, அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.