
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி அஞ்சலி செலுத்த வந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை கிளப்பி உள்ளது.