ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என கூறி வரும் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மை தன்மையை அறிய காவல் துறைக்கு அனுப்பியுள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.