ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்த 7 வயது சிறுமிக்கு, சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அச்சிறுமி, திடீரென வலியினாலும் பயத்தினாலும் அலறித் துடித்து அழுததைக் கண்டு அவளது தாய் பதறியுள்ளார். அப்போது, தன் அருகில் அமர்ந்திருந்த நபர் தனது ரகசிய உறுப்புகளைத் தொட்டுத் துன்புறுத்தியதாக அச்சிறுமி அழுதுகொண்டே தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு, தப்பிக்க முயன்ற அந்த காமுகனை நாலாபுறமும் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர்.
Mohammad tightly squeezed the private parts of a 7-year-old girl on a train, causing the child to scream & weep. When her mother asked what was wrong, the girl revealed that the man sitting on the seat had molested her.
People taught him lessons
What punishment should be given pic.twitter.com/Q3dBkng0PG
— Baba Banaras™ (@RealBababanaras) May 28, 2026
இந்தச் சம்பவம் குறித்த செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பொது இடங்களிலும், ரயில்களிலும் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். “இத்தகைய கொடூர குணம் படைத்த காமுகர்களை ஓடும் ரயிலில் இருந்தே தூக்கி எறிய வேண்டும்” என்றும், சட்டம் இவர்களுக்கு மிகக் கடுமையான மற்றும் விரைவான தூக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
