குஜராத் மாநிலம் ஓகா மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து மதுரைக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி வரை இயக்கப்படும். மருமார்கமாக மதுரையில் இருந்து ஓகாவுக்கு வெள்ளிக்கிழமை தோறும் டிசம்பர் 29ஆம் தேதி வரை சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் கூடுதலாக ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதனைப்பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.