முதுமையில் வருமானம் போன்ற மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள். இதற்கு தற்போது ஆண்டுக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தனிநபர் அதிகபட்சம் ஒன்பது லட்சம் முதலீடு செய்யலாம். இருவர் வைத்திருக்கும் கூட்டு கணக்குகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வரம்பு உள்ளது. மேலும் ஒன்பது லட்சம் முதலீட்டில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் பெறலாம். 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.