நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ட்விட்டரில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மூன்று ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

அதன்படி இபிஎஸ்-இன் #ஒற்றை விரலால்_ ஓங்கி அடிப்போம் என்ற வாசகத்தை குறிப்பிட்டு அதிமுகவினரும், அதற்கு அடுத்தபடியாக பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுடன் திமுகவினர் #NoVoteToBJP , நாம் தமிழர் கட்சியினர் #சீமானே_எங்கள்_சின்னம் என்ற ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.