
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அறிக்கை அளித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தேவையற்றது. மத்திய அரசிடம் நிதியை மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும். Clean இந்தியா போல் Green இந்தியா திட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.