பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான திலகபாமாவை நீக்குவதாக அறிவித்தார்.

அதிலிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். மேலும் கட்சியின் தலைவராகிய தனக்கு தான் முழு அதிகாரமும் உள்ளது என் அன்புமணி கூறினார்.

தற்பொழுது தைலபுரத்தில் இருந்து இரண்டாவது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். மறுபுறம் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பாமக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக கி.லோகநாதன் நியமனம் என ராமதாஸ் அறிவித்த நிலையில்  இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள க.சரவணனே அப்பொறுப்பில் தொடர்வார் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.