
மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்துடன் மோதாமல் இருப்பதற்காக பாதை மாறி செல்ல முயன்ற நிலையில் இருசக்கர வாகனம் மீது நேரடியாக மோதியதாகவும், அதில் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் உயரத்தில் தூக்கி வீசப்பட்டு விட்டதாகவும் காண முடிகிறது.
இதே போல் இந்த சம்பவத்திற்கு ஒரு நாளைக்கு முன் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய நிலையில் சாலையில் புரண்டு விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். அப்போது பேருந்தில் இருந்த 48 பயணிகளில் சிலருக்கு கை மற்றும் கால் எலும்புகள் முறிந்த நிலையில் சிலர் காயங்களுடன் உயிர் தப்பித்தனர். அது மட்டுமன்றி அதில் பெண்கள் மற்றும் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது . மேலும் ஒரே பகுதியில் இவ்வாறு தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
काल जिथे एसटी बसचा अपघात झाला, त्याच ठिकाणी पुन्हा एकदा दुचाकीच्या चुकीमुळे अपघात घडला…
आता सांगा नेमकी चूक कोणाची…??? https://t.co/xYqm3LmbE9 pic.twitter.com/rVsLAf0ogv
— Rohit Dhende (@avaliyapravasi) March 4, 2025