தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் 6000 ரூபாய் நிவாரணம் பெற விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்ப விநியோகம் ஓரிரு நாளில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டு ஒரு அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணத் தொகை ஒரு வாரத்தில் கொடுத்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.