பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதாவது தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பாஜக தனது போலி செய்தி பரப்பும் கட்சிக்காரர்களை வைத்து மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை என்று பரப்புகின்றனர் என அவர் கூறியுள்ளார்.