இந்த உலகில் தண்ணீர் தேவை என்பதை விலங்குகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட தண்ணீரை தற்போது விலை கொடுத்தும் வாங்கும் நிலை உள்ளது. பெரும்பாலும் தற்போது போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரித்திகா போராஹ்என்ற பெண்மணி தன்னுடைய twitter பக்கத்தில் உயர்தர உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்றதாகவும் அப்போது அவர்கள் தண்ணீர் போத்தலுக்கு 350 ரூபாய் கட்டணமாக விதித்ததாகவும் அதனை மீண்டும் உபயோகிக்கலாம் என்று நான் தண்ணீர் போத்தலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நினைத்தேன். இந்த மாதிரியான நிகழ்வு எனக்கு மட்டும்தான் நடந்துள்ளதா அல்லது உங்களுக்கும் நிகழ்ந்துள்ளதா என்று அவர் கேள்வி கேட்டு அந்த பதிவை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.