
டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது.
34 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், மடியில் குழந்தையுடன் நின்ற பெண், “இது அரசாங்க விதி… ஹெல்ப்லைனுக்கு அழைக்கவும்…” என சத்தமாகக் கூறுகிறார். அதற்குப் பதிலளிக்க, அமர்ந்திருந்த பெண் “விதிகள் உங்களுக்கு மட்டுமேதான் பொருந்துமா?” என வாக்குவாதம் செய்கிறார்.
Kalesh inside Delhi Metro b/w Two ladies over Seat issues: pic.twitter.com/ij3TY2DYAm
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 2, 2025
இரண்டு பேருக்குமான சண்டை தீவிரமடைந்தபோதிலும், மெட்ரோவில் இருந்த பிற பயணிகள் யாரும் மத்தியிலே தலையிடவில்லை. சிலர் அமைதியாக அந்தக் காட்சியை பார்வையிட்டு, சிலர் மொபைலில் வீடியோ பதிவு செய்ததை காண முடிகிறது.
இந்த காணொளிக்கு சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஒருவர் – “இப்போதெல்லாம் மெட்ரோவில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக சண்டையிடுகிறார்கள்” என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மெட்ரோவில் ஒழுங்கமைக்கப்பட்ட விதிமுறைகள் இருந்தாலும், பயணங்களில் ஏற்படும் மோதல்கள் குறைவடைய வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.