தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனைப் போலவே இபிஎஸ் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவில் பொதுச் செயலாளர் இ பி எஸ் கட்சிக்கு 2 கோடி தொண்டர்கள் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சமீப காலமாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று இபிஎஸ் முன்னிலையில் அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள், புதிதாக பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.