தமிழகத்தில் பால்வள துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம்கள் விலையும் மார்ச் மூன்றாம் தேதி நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஆவின்  நிறுவனம் மூலமாக சுமார் 31 லட்சம் லிட்டர் பால், நூற்றுக்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ஐந்து ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. அதாவது ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ஐந்து ரூபாய் உயர்ந்து 25 ரூபாய்க்கும், ஆவின் வெண்ணிலா பால் விலை 30 ரூபாய்க்கும் , வெண்ணிலா கிளாசிக் கோன் விலை ஐந்து ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் ஐந்து ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது