அசாம் மாநிலத்தில் மனாஸ் என்ற பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. நேற்று அந்தப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் சவாரி ஜிப்பில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காண்டாமிருகம் ஜீப்பின் முன்பு முட்டி மோதி ஜீப்பை கவிழ்க்க முயற்சித்தது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த ஜீப்பை காண்டாமிருகம் பலமுறை கவிழ்க்க முயன்றது. பிறகு அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதனால் ஜீப்பில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த சில நாட்களாக காண்டாமிருகம் தாக்குதல் அதிகமாக நடந்து வருகிறது. இதேபோன்று கடந்த ஜனவரி மாதம் அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஒரு பெண் மற்றும் அவரது மகள் ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்‌.

அப்போது ஒற்றை கொம்பு காண்டாமிருகம் அவர்கள் சென்று கொண்டிருந்த ஜிப்பின் முன்பு வந்து முட்டியது. அதிர்ஷ்டவசமாக இருவரும் அதிலிருந்து உயிர்தப்பினர். தற்போது மனசு தேசிய பூங்காவிலும் இதே போன்று நடைந்ததால் பூங்காவிற்கு சுற்றுலா செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.